புதுச்சேரி: கவர்னர் கிரண்பேடி விவரம் தெரியாமல் பேசி வருகிறார் என்று முதல்வர் நாராயணசாமி கூறினார். புதுச்சேரியில், முதல்வர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தனிப்பட்ட பயணமாக நானும் தொழில்துறை அமைச்சர் ஷாஜகான் மற்றும் பிப்டிக் சேர்மன் சிவா ஆகியோர் கடந்த 6ம் தேதி சிங்கப்பூர் சென்றோம். மெய்ன் ஹர்ட் என்ற கட்டுமான நிறுவனத்துடன் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம்.
நான் மத்திய அமைச்சராகவும், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளேன். வெளிநாடு செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் குறித்து எனக்கு நன்றாகவே தெரியும். அதன்படி 24.10.2019 அன்று பிரதமருக்கு இந்த பயணம் குறித்து கடிதம் எழுதி இருக்கிறேன். இதை தொடர்ந்ேத நாங்கள் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டோம். ஆனால் புதுச்சேரி வளர்ச்சிக்காக முதலீடுகளை கொண்டு வர சென்றதை கவர்னர் கிரண்பேடி எந்த விவரமும் தெரியாமல் பேசியிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.